சென்னை : கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் என சென்னை வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். கடலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்யகூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.