கரூர்: ஒன்றரை ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மின்இணைப்புகளை கொடுத்துள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒரு ஆண்டில் ஒரு லட்சம் புதிய மின்இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். நடக்குமா என அனைவரும் கேட்டனர், நடக்குமா என்பதை நடத்திக்காட்டுவதே திமுக அரசு. மின் இணைப்பு திட்டத்தை துவக்கி வைத்த ஆறே மாதத்தில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட்டது என முதலமைச்சர் தெரிவித்தார்.