×

டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு

அடிலெய்டு: டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரை இறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று அடிலெய்டு ஓவலில் நடைபெறும் 2-வது அரை இறுதியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது. இரு அணிகளும் கிட்டத்தட்ட சரிசம பலத்துடனே காணப்படுகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் இந்தியாவும், 10-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் இந்திய அணியில், லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இங்கிலாந்து அணியில், ஜோஸ் பட்லர் (கேப்டன்), அலெக்ஸ் ஹாலெஸ், டேவிட் மலான் அல்லது பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட் அல்லது கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Tags : England ,India ,T20 World Cup , England won the toss and elected to bowl against India in the T20 World Cup semi-final
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...