×

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை தேடப்பட்ட தீவிரவாதி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் விடிய விடிய நடத்திய துப்பாக்கி சண்டையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய தீவிரவாதி முடாசிர் பண்டிட் உட்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த படையினர் தீவிர தேடுதல் ேவட்டை நடத்தினர்.  அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இரவு தொடங்கிய துப்பாக்கி சண்டை விடிய விடிய தொடர்ந்தது. இதில், 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த தீவிரவாதியான முடாசிர் பண்டிட் கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய தீவிரவாதியான முடாசிர் பண்டிட் சமீபத்தில் காஷ்மீரில் 3 போலீஸ் அதிகாரிகள், பாஜவின் 2 கவுன்சிலர்கள், பொதுமக்களில் 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவன். அவனை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர்.  தற்போது அவன் கொல்லப்பட்டிருப்பதால் காஷ்மீர் மக்கள் நிம்மதி அடைந்திருப்பதாகவும், கொல்லப்பட்டவர்களின் மீதமுள்ள இருவர் பாகிஸ்தானை சேர்ந்த அஸ்ரர் மற்றும் அப்துல்லா என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

The post காஷ்மீரில் துப்பாக்கி சண்டை தேடப்பட்ட தீவிரவாதி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Srinagar ,Lashkar-e ,-Taiba ,Jammu ,
× RELATED மின்னணு வாக்கு பதிவு கருவி திருட்டு...