டெல்லி: கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் ரூ.55,575 கோடி சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.55,575 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு தொடர்பாக 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவதற்கான அடையாள எண்களில் 22,300 போலிகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.