செங்கல்பட்டு: பிரதீபா பாட்டீலை போல் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் குடியரசுத் தலைவராக கூடும் என பாரிவேந்தர் எம்.பி. தெரிவித்துள்ளார். எஸ்.எம்.எஸ். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பட்டமளிப்பு விழாவில் பாரிவேந்தர் எம்.பி. பேசினார். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ளதற்காக ஓம் பிர்லாவுக்கு நன்றி. சபாநாயகராக வந்துள்ள ஓம் பிர்லா, குடியரசுத் தலைவராகக்கூடும். ஆளுநராக பங்கேற்ற பிரதிபா பாட்டீல், பின்பு குடியரசுத் தலைவரானார். மக்களவையில் உறுப்பினர்களை ஓம் பிர்லா சிரித்தபடி கட்டுப்படுத்துவார் என பாரிவேந்தர் கூறினார்.