×

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ரூ.5 லட்சம் குட்கா பொருட்களுடன் வந்த கார் பறிமுதல்: போலீஸ் விசாரணை

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ரூ.5 லட்சம் குட்கா பொருட்களுடன் வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. துறையூர் சந்திப்பு அருகே நேற்று இரவு போலீசார் வாகன சோதனை நடத்தியபோது கர்நாடக பதிவு எண்ணுள்ள காரை நிறுத்தினர். போலீசாரைக் கண்டவுடன் எதுமலை சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே காரை நிறுத்திவிட்டு கடத்தல் கும்பல் தப்பியோடியது. காரில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை காருடன் பறிமுதல் செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Gutka ,Mannchanallur, Trichy district , Trichy, gutka products, car seized
× RELATED குட்கா பதுக்கி விற்ற கடைக்காரர் கைது