புதுச்சேரி : புதுச்சேரி அரசு பணி நியமனங்கள், விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரி அரசு உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித்துறையில் 10,000 பேரை சட்டவிரோதமாக பணியமர்த்த புதுச்சேரி அரசு முயற்சிப்பதாக புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரி அய்யாசாமி வழக்கு தொடர்ந்தார்.