காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார். கிடப்பில் போடப்பட்ட பள்ளத்தில் கால் இடறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் லட்சுமிபதி என்பவர் உயிரிழந்தார். உரிய பாதுகாப்பின்றி நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளால் விபரீதம் ஏற்பட்டுள்ளது. சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.