×

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் அரண்மனை கோயிலில் திருடிய ரூ.33 கோடி மதிப்புள்ள பெருமாள் சிலை மீட்பு: 600 ஆண்டுகள் பழமையானது; திருடியவர் கைது

சென்னை: கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள அரண்மனை ஒன்றின் கோயிலில் திருடப்பட்ட ரூ.33 கோடி மதிப்புள்ள 600 ஆண்டுகள் பழமையான பெருமாள் சிலையை விற்பனை செய்ய முயன்ற நபரை சிலை திருட்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் பழமையான பெருமாள் சிலை விற்பனை செய்ய முயற்சி நடந்து வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் வியாபாரிகள் போல, கடந்த 4ம் தேதி அவிநாசியில் தரகர் ஒருவரை சந்தித்து பேசினர்.

அப்போது 600 ஆண்டுகள் பழமையான பெருமாள் சிலை தனது நண்பரிடம் இருப்பதாகவும், அதை அவர் ரூ.33 கோடிக்கு விற்பனை செய்ய இருப்பதாக கூறினார். அந்த தரகர் கூறியபடி, கடந்த 6ம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பழனிசாமி என்பவர் வீட்டிற்கு சென்று சிலையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், அந்த சிலையை ரூ.15 கோடிக்கு விற்க பழனிசாமி முன்வந்தார். அதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான குழுவினர் பழனிசாமியை கைது செய்தது அவரிடம் இருந்து 29.8 கிலோ எடை,  58 செ.மீட்டர் உயரம், 31 செ.மீட்டர் அகலம் கொண்ட பெருமாள் சிலை மீட்டனர்.

சிலை குறித்து கைது செய்யப்பட்ட பழனிசாமியிடம் விசாரணை நடத்திய போது, கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த நடராஜன் என்பவரிடம் உதவியாளராக வேலை செய்த போது இந்த சிலை எனக்கு கிடைத்தது என்றும், நடராஜனுக்கு இந்த சிலை, கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள அரண்மனை கோயில் ஒன்றில் பூசாரியாக வேலை செய்த நபர், தனது வறுமையால் நடராஜனிடம் இந்த சிலையை கொடுத்துவிட்டு பணம் வாங்கி சென்றது தெரியவந்தது. பெருமாள் சிலையை நடராஜன் தனது காரில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு வரும் போது, கர்நாடக போலீசார் நடராஜனை கைது செய்து சிலையை பறிமுதல் செய்தனர்.

ஆனால் நடராஜன் சிலைக்கான போலி ஆவணங்கள் தயாரித்து நீதிமன்றம் மூலம் அந்த சிலையை மீண்டும் அவர் பெற்று கொண்டது விசாரணையில் தெரியவந்தது. நடராஜன் இந்த பெருமாள் சிலையை பல கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்தார். ஆனால் பெரிய தொகை என்பதால் அவரால் விற்பனை செய்யமுடியவில்லை. பிறகு நடராஜன் கடந்த 2018ம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பிறகு பழனிசாமியிடம் இந்த சிலை வந்ததுள்ளது. அதன்படி அவர் இந்த சிலையை விற்பனை செய்ய முயன்ற போது சிக்கி கொண்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மாண்டியாவில் உள்ள அரண்மனை கோயில் ஒன்றில் பூசாரியாக வேலை செய்த நபர், தனது வறுமையால் நடராஜனிடம் இந்த சிலையை கொடுத்துவிட்டு பணம் வாங்கி சென்றது தெரிந்தது.

Tags : Mandya, Karnataka , Rescue of Rs 33 crore Perumal statue stolen from palace temple in Mandya, Karnataka: 600 years old; The thief was arrested
× RELATED கர்நாடகத்தில் இருந்து ஒரத்தநாடு...