விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் ஏலம் விடப்படும் வாகனத்தில் மண்டை ஓடு இருந்ததால் ஏலம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணைக்கு கொண்டு வரப்பட்ட மண்டை ஓட்டை காருக்குள் வைத்ததாகவும், அதை கவனிக்காமல் காரை ஏலத்திற்கு விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.