×

மங்கலம்பேட்டை அருகே பயணியர் நிழற்குடை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் பரிதாப பலி-உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள விஜயமாநகரம் புது வெண்ணைக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. இவரது மனைவி விஜயகுமாரி. இவர்களுக்கு வினோத்குமார் (11) என்ற மகன் இருந்தார். இவர் விருத்தாசலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து தற்போது இரண்டு வருடமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளான்.  

இந்நிலையில் விருத்தாசலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை நெடுஞ்சாலைத் துறையின் மூலம் நடந்து வரும் சாலை விரிவாக்க பணிக்காக விஜயமாநகரம் பேருந்து நிறுத்தம் அருகே பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழையின் காரணமாக மழை நீர் தேங்கி குட்டையாக இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று அவ்வழியே வந்த சிறுவன் வினோத்குமார்  திடீரென அந்த பள்ளத்தில் விழுந்துள்ளான். இதில் நீரில் மூழ்கிய அலறி அடித்து சத்தம் போட்டுள்ளான். ஆனால் அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் நீச்சல் தெரியாத சிறுவன் தண்ணீரில் மூழ்கி துடிதுடித்து இறந்துள்ளான்.

இதுகுறித்து தகவல் அறிந்து ஓடி வந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்ற மங்கலம்பேட்டை போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கிட் ஜெயின் தலைமையிலான போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தை கண்டித்து சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விஜயமாநகரம் பேருந்து நிறுத்தம் அருகே விருத்தாசலம்-மங்கலம்பேட்டை நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மங்கலம்பேட்டை போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி சாலை மறியலை கைவிட செய்தனர். இதனால் விருத்தாசலம் மங்கலம்பேட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த மழை நீரில் சிறுவன் விழுந்து உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags : Mangalampet ,-Relatives , Vrudhachalam: Jayamoorthy hails from Pudu Vennaikuzhi village in Vijayamanagaram near Mangalampet next to Vrudhachalam.
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்