மதுரை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அர்ச்சகர்கள் உட்பட யாரும் கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தடை உத்தரவை மீறி செல்போன் பயன்படுத்தினால் பறிமுதல் செய்து மீண்டும் ஒப்படைக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.