தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே மேலமங்கலம் கிராமத்தில் 4 நாளாக மின்சாரம் இல்லாததால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ஒசனத்து சாலையில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.