×

தாம்பரம் கோட்டத்திற்கு மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்

சென்னை: தாம்பரம் கோட்டத்திற்கு வரும் 10ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, மின்சாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாம்பரம் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் மின் தொடர்பான பிரச்னைகள் மற்றும் சந்தேகங்களுக்கு வரும் 11ம் தேதி காலை 11 மணியளவில், மேற்கு தாம்பரம், முல்லை நகரில் உள்ள புதுதாங்கல் துணைமின் நிலைய வளாகத்தில் செயற்பொறியாளர் தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெறும். எனவே, பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags : Tambaram Division , Electricity consumer grievance redressal meeting for Tambaram zone
× RELATED தாம்பரம் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்