×

சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 169 நிவாரண மையங்கள் தயார்: அறிக்கை விவரம் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை வடகிழக்கு பருவமழை - 2022 தினசரி நிலை அறிக்கை: நேற்றைய தினம் (7.11.2022) தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் 4.18 மி.மீ. மழை பெய்துள்ளது.
இதில் சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 21.34 மி.மீ. பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 மனித உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், 7.11.2022 அன்று திருவாரூர் மாவட்டத்தில் 1 மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4.00 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக 7.11.2022 அன்று

* 35 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது.

*  77 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி

* 7.11.2022 முடிய பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக விழுந்த 72 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

* 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

* மழை நீர் தேங்கியதால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 29.10.2022 முதல் 05.11.2022 முடிய மொத்தம் 2,83,961 உணவு பொட்டலங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

* மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 816 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன.

வானிலை முன்னறிவிப்பு

* அடுத்த 4 நாட்களுக்கான முன்னெச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக வரப்பெற்றுள்ளது.

* 7-11-2022 மற்றும் 8-11-2022 ஆகிய நாட்களில் சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய பெய்யக்கூடும். லேசானது முதல் மிதமான மழை

* 9-11-2022 அன்று பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

* 9-11-2022 அன்று இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என்றும், இது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 4.11.2022 நாளிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 10-11-2022 அன்று பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

* கன்னியாகுமரி. திருநெல்வேலி. தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம். சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

* 11-11-2022 அன்று பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

* விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை. இராமநாதபுரம். மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

* செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி. திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

* பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்புஅலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கூடுதலாக தலா 2 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர்.

* 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.

* இதுவரை 1070 கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக 441 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது. அதில் 375 தொலைபேசி அழைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளது. 66 தொலைபேசி அழைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது தொடர்பாக வரப்பெற்ற மொத்தம் 226 தொலைபேசி அழைப்புகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு விபரம்

* இன்று காலை மணி நிலவரப்படி செம்பரம்பாக்கத்தில் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்போது 20.43 அடி இருக்கிறது. தற்போது செம்பரம்பாக்கத்திற்கு 33 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 680 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

* அதே போல, செங்குன்றம் (புழல்) ஏரியின் மொத்த கொள்ளளவு 21.20 அடி, தற்போது 18.66 அடியாக இருக்கிறது. தற்போது செங்குன்றம் ஏரிக்கு 84 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

Tags : northeastern ,Chennai Municipality , 169 relief centers ready to face Northeast Monsoon in Chennai Corporation: Report details released
× RELATED வடகிழக்கு மாநில மக்களை கைவிட்டுவிட்ட...