×

வனத்துறை வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக அலுவலர்கள் மற்றும் வனத்துறை உயர் அலுவலர்களுடன் அமைச்சர் ராமச்சந்திரன் ஆலோசனை.!

சென்னை: வனத்துறை வளர்ச்சிப் பணிககளை மாநில அளவிலான மாவட்ட வன அலுவலர்கள் மற்றும்  வனத்துறை உயர் அலுவலர்களுடன் வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு முழுவதும் வனத்துறை மூலம் பல்வேறு திட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து சென்னை, வனத்துறை தலைமை அலுவலக பிரதான  கூட்ட அரங்கில் இன்று ( 08.11.2022) நடைபெற்ற கூட்டத்தில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள்  மாநில அளவிலான மாவட்ட வன அலுவலர்கள் மற்றும்  வனத்துறை  உயர் அலுவலர்களுடனான ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் பொதுமக்களின் அடிப்படை தேவைக்கான வனப்பகுதி சாலைகளை மேம்படுத்தி தருமாறு தெரிவித்துள்ள கோரிக்கைகளை அலுவலர்கள் முன்னுரிமை அடிப்படையில் நிறைவற்ற உத்தரவிட்டார்.

தமிழ்நாடு  முதலமைச்சர்  திரு.மு.க.ஸ்டாலின்  அவர்கள்  தமிழகத்தின் வனப் பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட,  பசுமை தமிழக இயக்கத்தின் மூலம்   நடப்பாண்டு,  முதல் கட்டமாக  360  நாற்றங்கால்கள் மூலம் வளர்க்கப்பட்டுள்ள  2..80 கோடி மரக்கன்றுகள்  நடும் திட்டத்தை  கடந்த 24.09.2022 அன்று தொடங்கி வைத்து சிறப்பித்துள்ளார்கள்.  அப்பொழுது  வனத்தில் வாழும் விலங்குகளும்,  அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்கான அடிப்படை வசதிகளை சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் மேம்படுத்திட உத்தரவிட்டுள்ளார்கள்.  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் உள்ள 234 சட்ட மன்ற உறுப்பினர்களின் தொகுதிக்கான 10 முக்கிய கோரிக்கைகளை பெற்று நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்கள்.  

அதன்படி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் பொதுமக்களின் அடிப்படை தேவைக்கான வனப்பகுதி சாலைகளை மேம்படுத்தி தருமாறு தெரிவித்துள்ள கோரிக்கைகளை அனைத்து அலுவலர்களும் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்று அமைச்சர் ஆய்வின்போது தெரிவித்தார். மேலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாவட்ட வன அலுவலர்கள் மாநாட்டின் போது பழங்குடியின மக்களுக்கான மேம்பாட்டு பணிகள், வனவிலங்குகள்-மனித மோதல்கள் தடுப்பு நடவடிக்கைகள், சட்டமன்ற அறிவிப்புகள் உரிய காலத்தில் நிறைவேற்ற தேவையான பணிகளை அலுவலர்கள் முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.  இதனை நிறைவேற்றிட வனத்துறையின் ஆணிவேர்களாக உள்ள மாவட்ட வன அலுவலர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான திட்டங்களுக்கு சரியான முன்மொழிவுகளை அனுப்பி வைத்து நிதி ஒதுக்கீடு பெற்று குறிப்பிட்ட காலகெடுவுக்குள் பணிகளை முடிக்க வேண்டும்.

வனப்பணியாளர்களுக்கான இரண்டு சக்கர மின்சார வாகனங்கள் கொள்முதல் செய்தல், ரூ. 16 கோடி மதிப்பில் சூழல் சுற்றுலா பணிகள், வனவிலங்குளால் பாதிக்கப்படும் நபர்களுக்கு வழங்கப்படும் நிவாரன நிதியை ரூ,5 இலட்சத்திலிருந்து ரூ,10 இலட்சமாக உயர்த்துதல், ரூ.3.6 கோடியில் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் மேம்பாட்டு பணிகள், ரூ,5,2 கோடியில் சோலைகக்காடுகள் பாதுகாப்பு மையம் தொடங்குதல், ரூ.32 கோடியில் வனத்துறை மேலாண்மைப் பணிகள் செயலாக்கம், அகஸ்தியர் மலையில் யானைகள் காப்பகம், கடற்பசு காப்பகம், தேவாங்கு சரணாலயம், ஆமைகள் பாதுகாப்பு மையம் போன்ற சட்டமன்ற அறிவிப்புகளின் செயலாக்கத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

மேலும், தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் திட்டப்படி 10 ஆண்டுகளுக்குள் தமிழகத்தின் நிலப் பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நடவு செய்யப்பட வேண்டிய மரக்கன்றுகளை வளர்க்கவும், நடவு செய்திடவும், முழுமையாக வளர்த்திட குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் சரியாக திட்டமிட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில்  சுற்றுச்சூழல், காலநிலை  மாற்றம்   மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச்  செயலாளர்  திருமதி சுப்ரியா சாஹு இ.ஆ.ப., அவர்கள், வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்) திரு.சையத் முஜம்மில் அப்பாஸ், இ.வ.ப.,  முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்/தலைமை செயல் அலுவலர் (கேம்பா) திரு.சுப்ரத் மஹாபத்ர, இ.வ.ப.,  வனவிலங்குகள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (கூ.பொ) திரு.சீனிவாஸ் ரா.ரெட்டி, இ.வ.ப., கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்கள்  மற்றும்  மாவட்ட வன  அலுவலர்கள்  கலந்து கொண்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து தெரிவித்தார்கள்.

Tags : Minister ,Ramachandran ,Department of Agriculture , Minister Ramachandran consults with the officers and higher officials of the forest department regarding the development work of the forest department.
× RELATED நாட்டுப் பசுவில் நன்மைகள் அதிகம்: வேளாண்துறை தகவல்