×

அதிக வட்டி தருவதாக கூறி கோடிக் கணக்கில் மோசடி: புதுக்கோட்டை அருகே பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா போராட்டம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாப்பட்டியில் பண மோசடியை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிக வட்டி தருவதாக கூறி கோடிக் கணக்கில் மோசடி செய்த நபர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரூ.1 லட்சம் செலுத்தினால் ரூ.15,000 வட்டி தரப்படும் என கூறி சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் மோசடி அரங்கேறியுள்ளது. மோசடி செய்த சௌந்தரராஜன், மகன் அலெக்சாண்டர் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டோர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : Koddik ,Pudukkotta ,Dharna , High interest, fraud, Pudukottai, dharna protest
× RELATED இன்சூரன்ஸ் ஊழியர்கள் தர்ணா போராட்டம்