×

தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களில் சிசிடிவி பொருத்தக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் கண்காணிப்பு சிசிடிவி கேமரா பொருத்தக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது. உணவகங்களில் தரமான உணவு வழங்கப்படுவதை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பல உணவகங்கள் செயல்பட்டு வருவதால் மனுதாரரின் கோரிக்கை சாத்தியமில்லை என்று கூறி இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை பல உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. உணவகங்களில் போதுமான அளவு தரத்துடன் உணவுகள் தயாரிக்கப்படுவது இல்லை என வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் உணவகங்களில் தரமான உணவு வழங்கப்படுவதை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தக் கோரியிருந்தது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான ஹோட்டல்களிலும், ரெஸ்டாரண்ட்களிலும், சமையலறைகளிளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்.

ஆனால் இது சாத்தியமில்லை என்று கூறி தற்போது உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தற்போது தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பல உணவகங்கள் செயல்பட்டு வருவதால் மனுதாரரின் இந்த கோரிக்கை சாத்தியமில்லை என்றும் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்ததுள்ளது.

Tags : Tamil Nadu , Petition to install CCTV in all restaurants in Tamil Nadu dismissed
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...