சென்னை: 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சமூகநீதிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இயற்கை நீதிக்கும் எதிரானது. 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் ம.ம.க. சார்பில் தான் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்ததாக ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.