×

போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் 64 பேருக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பணி உயர்வு

தண்டையார்பேட்டை: வடக்கு மாவட்ட போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் 64 பேர், சிறப்பு உதவி ஆய்வாளராக பணி உயர்வு பெற்றனர். அவர்களுக்கு, வடக்கு மாவட்ட போக்குவரத்து துணை ஆணையர் சிறப்பாக பணிபுரிய அறிவுரை வழங்கினார். காவல் துறையில் 2ம் நிலை காவலராக கடந்த 1997 வருடம் பணியில் சேர்ந்து பயிற்சி பெற்று 25 ஆண்டுகள் கடந்த காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி வடக்கு போக்குவரத்து மாவட்டத்தில் பூக்கடை சரகம், வண்ணாரப்பேட்டை சரகம், புளியந்தோப்பு சரகம், மாதாவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் போக்குவரத்து பிரிவு, போக்குவரத்து புலனாய்வு பிரிவுகளில் பணிபுரிந்த 64 பேர் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி உயர்வு பெற்றனர்.

அவர்கள் அனைவரையும் போக்குவரத்து வடக்கு மாவட்ட காவல் துணை ஆணையாளர் ஹர்ஷ்சிங், பாரிமுனையில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்து, பணியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், அவர்கள் துணை ஆணையரிடம் பணியில் சிறப்பாக செயல்படுவோம் எந்த ஒரு தவறையும் செய்ய மாட்டோம் என்று உறுதி கூறினர். இந்நிகழ்ச்சியில் பூக்கடை உதவி ஆணையர் சம்பத் பாலா, புளியாந்தோப்பு உதவி ஆணையர் பாலசுப்பிரமணி, ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் போலீசார்கள் கலந்து கொண்டனர்.


Tags : Transport Division, Employed, 64 Special, Assistant Inspector, Promotion
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...