×

உபியில் பெண்கள் மீது போலீஸ் தாக்குதல்

அயோத்தியா: உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர்நகர் மாவட்டம் ஜலால்பூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை மர்மநபர்களால் அடித்து உடைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு குவிந்த அப்பகுதி பீம் சேனா பெண் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். அப்போது திடீரென அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் சரமாரியாக தடியடி நடத்தினர். பெண்களை போலீசார் விரட்டி விரட்டி அடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : UP , Police attack on women in UP
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...