×

10% இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கோட்பாட்டின் மீது விழுந்த பேரிடி; விசிக சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்..திருமாவளவன் பேட்டி..!!

சென்னை: 10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கோட்பாட்டின் மீது விழுந்த பேரிடி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், சமூக நீதி என்ற கோட்பாட்டின் அடிப்படையை தகர்க்க வேண்டும் என்பதற்காக தான் EWS என்ற இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி இது. இந்த அநீதியை எதிர்த்து தீவிரமாக களமாட வேண்டிய பொறுப்பு ஓபிசி பிரிவினருக்கு உள்ளது. ஓபிசி என்ற பெரும்பான்மை இந்து சமூகத்துக்கு எதிராக பாஜக செயல்படுவதை உணர்த்துகிறது. எனவே 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். தீர்ப்பை எதிர்த்து 9 பேர் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்ய வேண்டும்.

5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு 10 சதவீத இடஒதுக்கீட்டை தீர்மானிக்க முடியாது எனவும் திருமாவளவன் கூறினார். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்சாதி ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் அமைப்பில் செய்யப்பட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், இடஒதுக்கீடு செல்லும் என்று 3 நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பளித்தனர். 10 சதவீத இடஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மீறுவதாக இல்லை என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர் என்பது நினைவுகூரத்தக்கது.

Tags : Visika ,Thirumavalavan , 10% Reservation, Social Justice, Disaster, VC President Thirumavalavan
× RELATED குடியுரிமைத் திருத்தச் சட்டம்...