×

சென்னையில் இருந்து மைசூரு வரை இயக்கப்படும் நாட்டின் 5வது 'வந்தே பாரத்'ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது..!!

சென்னை: சென்னையில் இருந்து மைசூரு வரை இயக்கப்படும் நாட்டின் 5வது வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது. நாட்டின் முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய அதிவேக ரயில்களை ரயில்வே அமைச்சகம் கடந்த 2019ல் அறிமுகப்படுத்தியது. டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் முதல் சேவை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது நான்கு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் இருந்து மைசூரு வரை செல்லும் 5வது வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக பெங்களூரு சென்று மைசூரை அடையும். இதற்கான சோதனை ஓட்டத்தை சென்னை சென்ட்ரலில் தென்னக ரயில்வே பொது மேலாளர் மல்லையா தொடங்கி வைத்தார். இந்த ரயில் மைசூரு வரை சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பவுள்ளது. 5வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 11ம் தேதி தொடங்கிவைக்க உள்ளார்.


Tags : Chennai ,Mysore , Chennai, Mysore, 5th 'Vande Bharat' train, trial run
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...