×

இமாச்சலத்தில் போட்டியிடும் அதிருப்தி வேட்பாளரை போனில் மிரட்டிய மோடி?

புதுடெல்லி: இமாச்சல் பிரதேசத்தில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜ.வில் சீட் கிடைக்காத பல முக்கிய தலைவர்கள், சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். இது, பாஜ.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை பாதிக்கிறது. இதுபோல், பதேபூர் தொகுதியில் பாஜ அதிருப்தி வேட்பாளர் கிரிபால் பர்மார் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவருடன் பிரதமர் மோடி போனில் பேசியதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி நேற்று அளித்த பேட்டியில், ‘பதேபூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேண்டாம் என்று பாஜ அதிருப்தி வேட்பாளர் கிரிபால் பர்மாருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் அழுத்தம் கொடுத்து, உணர்ச்சிப்பூர்வமாக மிரட்டுகிறார். சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடப்பதை தடுக்க, தனது அதிகாரத்தை மோடி தவறாக பயன்படுத்துகிறார். இதுபோன்ற அவருடைய செயலும், பயன்படுத்திய வார்த்தைகளும் விரக்தியை காட்டுகிறது,’ என்று தெரிவித்துள்ளார்.    


Tags : Modi ,Himachal , Himachal, contested, disgruntled, candidate, threatened on phone, Modi?
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...