கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடியதாக 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சைமன் நகர் பகுதியில் வீடு புகுந்து திருடிய 10 வழக்குகளில் ராமநாதபுரம் குமார் (29), அருப்புக்கோட்டை சிவகுமார் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான இருவரிடம் இருந்து 50 சவரன் தங்க நகைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.