×

லாரியில் கடத்திய ரூ.50 லட்சம் குட்கா பறிமுதல் 2 பேர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரக  தனிப்படையினர் ரகசிய தகவல் அடிப்படையில், வேளாங்கண்ணி காவல்  எல்லைக்கு உட்பட்ட பாலாகுறிச்சி அருகே நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கன்டெய்னர் லாரியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த பாலாகுறிச்சியை சேர்ந்த கவாஸ்கர் மற்றும் கன்டெய்னர் டிரைவர் கர்நாடகாவை சேர்ந்த பிரதீப் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது பெங்களூரிலிருந்து குட்காவை கடத்தி வந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கன்டெய்னரில் இருந்த 2,078 கிலோ குட்கா மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.50 லட்சம். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து கவாஸ்கர், பிரதீப் ஆகியோரை கைது செய்தனர்.

Tags : Gutka , Gutka worth Rs 50 lakh smuggled in a truck seized, 2 arrested
× RELATED குட்கா விற்ற வாலிபர் கைது