சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கும் திட்டமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் பதில் அளித்துள்ளது. பிரதாப் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்க வேண்டும் என ஏற்கனவே அரசு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கூடாது என பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.