×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் 70 ஆயிரத்து 263 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28 ஆயிரத்து 965 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். கோயிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை கணக்கிடும் பணி நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இதில், ரூ4.53 கோடி காணிக்கையாக கிடைத்தது. நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் 20 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.

Tags : Tirupati Eyumalayan temple ,Swami , Devotees wait for 20 hours at the Tirupati Eyumalayan temple to see Swami
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி...