சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதை எதிர்த்த வழக்கை சிவில் நீதிமன்றம் நிராகரித்தது தவறு என்று சசிகலா தரப்பு வாதத்தில் கூறியுள்ளனர். ஜெயலலிதா மறைவுக்குபின் அதிமுகவின் அடுத்து பொதுச்செயலாளராக வ.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக அறிவித்தது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு 2017 செப்டம்பர் மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவில் சசிகலா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.