×

அதிமுக ஆட்சியில் எந்த மழை நீர் வடிகால் பணியும் நடைபெறவில்லை!: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: அதிமுக ஆட்சியில் எந்த மழை நீர் வடிகால் பணியும் நடைபெறவில்லை என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உப்பட்ட 4 இடங்களில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்த பிறகு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக எந்த பணியும் செய்யாததால்தான் மழைநீர் தேங்கியது; திமுக செய்ததால்தான் மழைநீர் தேங்கவில்லை. அதிமுக ஆட்சியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றிருந்தால் கடந்த ஆண்டு மழையின் போது பாதிப்பு ஏற்பட்டிருக்காது. அதிமுக ஆட்சியில் வடிகால் பணி திட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டிருந்தாலும் நிறைவேற்றப்பட்டது திமுக ஆட்சியில் தான் என கூறினார்.

தனது இருப்பை காட்ட வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி வருகிறார் என அமைச்சர் தெரிவித்தார். மழை காலம் முடிந்ததும் சென்னை சாலைகள் முழுவதுமாக செப்பனிடப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையால்தான் தற்போது சென்னையில் மழைநீர் தேங்கவில்லை எனவும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : AIADMK ,Minister ,KN Nehru , AIADMK, Water, DMK, Minister KN Nehru
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...