சென்னை: தமிழக திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன்(79) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த நெடுஞ்செழியன் ராஜீவகாந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நெடுஞ்செழியன் இன்று அதிகாலை உயிரிழந்தார். ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் நெடுஞ்செழியன் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அஞ்சலி செலுத்தினார்.