×

மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை விவகாரம்: வழக்கு ரத்தை எதிர்த்து சிபிசிஐடி மனு.! சிவங்கர் பாபா பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவனின் தாய்க்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, கடந்த 2010ம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்ததாக 2021ல் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. உத்தரவை திரும்பபெறக் கோரி சிபிசிஐடி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது காவல்துறை சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, இந்த  வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொள்ளாமல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.  இதற்கு பதிலளித்த சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், வழக்கை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு குறித்து சிவசங்கர் பாபா பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : CBCID ,Sivankar Baba , Case of sexual harassment of the student's mother: CBCID petition against the cancellation of the case. Sivankar Baba Reply High Court Order
× RELATED பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன்...