சென்னை: புதிதாக மாற்றியமைக்கப்பட்ட தென்காசி மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி வடக்கு மாவட்ட அவைத் தலைவராக பத்மநாபன், செயலாளராக ஈ.ராஜா, துணை செயலாளர்களாக வே.மனேகரன்(பொது), ராஜதுரை(ஆதி திராவிடர்),புனிதா(மகளிர்), பொருளாளராக இல.சரவணன், தென்காசி தெற்கு மாவட்ட அவைத் தலைவராக சுந்தரமகாலிங்கம், செயலாளராக சிவபத்மநாபன், துணைச் செயலாளர்களாக தமிழ்ச்செல்வன்(பொது), கென்னடி(ஆதி திராவிடர்), கனிமொழி(மகளிர்), முகம்மது செரிப்(பொருளாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடையநல்லூர் நகரச் செயலாளராக அப்பாஸ் சாகுல் ஹமீது, தென்காசிக்கு சாதிர், செங்கோட்டைக்கு வெங்கடேசன், சுரண்டைக்கு ஜெயபாலன், பேரூர் கழகச் செயலாளர்களாக முத்தையா(இலஞ்சி), சுடலை(மேலகரம்), சங்கர்(குற்றலாம்), பண்டாரம்(சுந்தரபாண்டியபுரம்), முகமது உசேன்(வடகரை), ராஜராஜன்(பண்பொழி), ஜெகதீசன்(கீழப்பாவூர்), நெல்சன்(ஆலங்குளம்), அழகேசன்(ஆழ்வார்குறிச்சி, லட்சுமணன்(முக்கூடல்), சிதம்பரம்(ஆயக்குடி), வெள்ளத்துரை(அச்சன்புதூர்), முத்து(எ)செல்லக்கனி(சம்பவர் வடகரை, கோபால்(புதூர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.