×

வியாசர்பாடி பகுதியில் 8 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: இழப்பீட்டுத் தொகை ரூ.10.07 லட்சம் வசூல்

சென்னை: வியாசர்பாடி பகுதியில் 8 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்தின் சென்னை/மையம், சென்னை/வடக்கு, சென்னை/தெற்கு, சென்னை/மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் சென்னை/வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட வியாசர்பாடி பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 8 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரூ. 9,43,335/- (ரூபாய் ஒன்பது லட்சத்து  நாற்பத்தி மூன்றாயிரத்து முன்னுhற்று முப்பத்தைந்து மட்டும்) இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ 64,000/- (ரூபாய் அறுபத்து நான்காயிரம் மட்டும்) செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை செயற்பொறியாளர்/அமலாக்கம்/சென்னை கைபேசி 9445857591  என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.


Tags : Vyasarpadi , 8 power thefts discovered in Vyasarpadi area: Rs.10.07 lakh compensation collected
× RELATED செயின் பறிக்க முயன்ற ரவுடி கைது