×

ஆந்திராவில் பலி ஆடு என்று நினைத்து வாலிபரின் தலையை வெட்டிய போதை ஆசாமி

மதனப்பள்ளி: ஆடு என்று நினைத்து வாலிபரின் தலையை வெட்டிய போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி அருகேயுள்ள வலசப்பள்ளியில்  ஊர் எல்லையில் உள்ள எல்லம்மா கோயிலுக்கு நேர்த்திக்கடன் இருந்து  ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம மக்கள் அனைவரும்  எல்லம்மா கோயிலுக்கு இரவில் ஆடு, கோழிகளை பலிகொடுத்தனர்.

அப்போது வெட்டுவதற்கான ஆடு ஒன்றை 35 வயது இளைஞரான சுரேஷ் பிடித்துக் கொண்டிருந்தார். ஆடுகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சலபதி என்பவர் நிறைய மது அருந்தி முழு போதையில் இருந்தார். நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் நடைபெற்ற இந்த பலிகொடுக்கும் சம்பவத்தின்போது போதையில் இருந்த சலபதி ஆடு என்று நினைத்து, ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த சுரேஷ் தலையை ஆடு வெட்டும் கத்தியால் ஓங்கி வெட்டினார்.

இதனால் படுகாயம் அடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து துடித்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக சுரேஷை மதனப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சுரேசுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் தவறுதலாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Andhra Pradesh , Andhra, thinking that he is a scapegoat, kills a teenager, is a drug addict
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி