தூத்துக்குடி: பரவலாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நெற்பயிர் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு பருவமழை தொடங்கியதும் அத்தரமடப்பட்டி, காலங்கரை உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். விவசாய தொழிலாளர்களுக்கு வாய்பளிக்க வேண்டும் என்பதற்காக நடவு எந்திரங்களை தவிர்ப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறை மற்றும் உர தட்டுப்பாடு ஆகியவை இம்முறை விவசாய பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் உழவர்கள் தெரிவிக்கின்றனர்.