×

சிங்கப்பூர், மலேசியாவில் முதல்வர் அறிமுகப்படுத்திய இளம் தொழில் முனைவோர் அமைப்பு கருத்தரங்கம்: விக்கிரமராஜா தகவல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய, இளம் தொழில் முனைவோர் அமைப்பு கருத்தரங்கம் சிங்கப்பூர், மலேசியாவில் நடைபெற உள்ளது என்று விக்கிரமராஜா கூறியுள்ளார்.  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
 திருச்சியில் நடைபெற்ற பேரமைப்பின் 39வது வணிகர் தின மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அங்கமான ‘இளம் தொழில் முனைவோர் அமைப்பை’ அறிமுகப்படுத்தினார். இந்த அமைப்பை அமைச்சர் மா.சுப்பரமணியன் தொடங்கி வைத்தார்.

 திரளான இளைஞர்கள் இவ்வமைப்பில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். பேரமைப்பின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பெருந் தொழில்திபர்களின் வழிகாட்டுதல்கள் மூலம் இளம் தொழில் முனைவோர் அமைப்பு அசுர வளர்ச்சி கண்டிருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக மலேசியா வணிகர் கருத்தரங்கம் நவம்பர் 3 முதல் 5 வரையும் மற்றும் சிங்கப்பூரில் நவம்பர் 6 முதல் 8 வரை நடைபெறுகிறது.

 மலேசியா சிலாங்கூர் இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோர் அமைப்பின் பிசினஸ் டூ பிசினஸ் இந்திய தொழில் வணிகர்களின் சந்திப்பு நவம்பர் 4ம்தேதி ஓட்டல் சிக்னேசர் இன்ல் எஸ்ஐசிசிஇ தலைவர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வு இருவழி வர்த்தக முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேற்படுத்துவதே நோக்கமாக கொண்டது.

 அதை தொடர்ந்து சிங்கப்பூர் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பின் தலைவர் மணியன் தலைமையில் தொழில் வணிகர் கருத்தரங்கம் நவம்பர் 7ம்தேதி சிங்கப்பூர் ‘லிட்டில் இந்தியா ஓட்டல் ஒன் பேரரில்’ நடைபெற உள்ளது. இவ்விழாவில் சிங்கப்பூர் அமைச்சர் எட்வின் டோங் சுன் பாய் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவராகிய நான் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ேளாம்.


Tags : Young Entrepreneur Organization ,Chief Minister ,Singapore, Malaysia , Singapore, Malaysia, CM, Young Entrepreneurs, Seminar, Wickramarajah, Info
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...