×

விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தம்

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிர்வாக காரணங்களுக்காக, விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி 01.11.2022 முதல் நிறுத்தப்படுவதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போதுள்ள நான்கு சக்கர வாகனங்கள் பாஸ் காலாவதி தேதி ஆகும் வரை அனுமதிக்கப்படும். மேலும், நான்கு சக்கர வாகனங்களுக்கு புதிய பாஸ் மற்றும் ஏற்கனவே உள்ள பாஸ்களை புதுப்பித்தல் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Metro Railway Station , Airport Metro Rail, Parking facility for four wheelers,
× RELATED இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது...