சென்னை: மின்னகத்தில் புகார் தெரிவிக்க கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மழைக்காலங்களில் எந்தவித தடையுமின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை நேரங்களில் மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.