கடலூர் : தமிழ்நாடு முழுவதும் 35 துணிக்கடைகளுக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, நெய்வேலி, கரூர், திருப்பூர், உதகை, நாமக்கல், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடந்து வருகிறது. தீபாவளி விற்பனை தொடர்பாக சரியாக கணக்கு காட்டவில்லை என்று எழுந்த புகாரை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது.