சென்னை: தொடர் மழை காரணமாக ஆவடி பசுமை பூங்கா அமைந்துள்ள பருத்திப்பட்டு ஏரி நிரம்பியது. 31 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் படகு சவாரி அமைத்து பசுமை பூங்கா செயல்பட்டு வருகிறது. ஆவடியில் 17 செ.மீ. மழை பெய்ததை அடுத்து ஏரி நிரம்பி, உபரி நீர் கால்வாய் மூலம் வெளியேறி வருகிறது.