சென்னை: தண்டவாளங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு சென்னை மாநகராட்சிக்கு தெற்கு ரயில்வே பாராட்டு தெரிவித்துள்ளது. எழும்பூர் ரயில் நிலைய தண்டவாளங்களில் மழைநீர் தேங்காததால் ரயில்கள் வழக்கமான வேகத்தில் இயக்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்து சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.