சென்னை: சென்னை தியாகராயநகர் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை சேறும் சகதியுமாக காணப்படுவதால் இருசக்கர வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தியாகராயநகர் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள் ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக உள்ளிருந்து வெளியில் செல்லும் வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.