சென்னை: பருவமழை பாதிப்புகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள் நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் மேயர் பிரியா, ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.