தஞ்சை: மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037வது சதய விழா தஞ்சையில் பெரிய கோயிலில் கோலாகலமாக தொடங்கியது. பெரிய கோயில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மீக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா நடந்து வருகிறது. நாளை தேவார நூலுக்கு சிறப்பு பூஜை செய்து ஓதுவார்கள் வீதி உலா; ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.