சென்னை : தேவர் ஜெயந்தியை ஒட்டி நடந்த விழாக்களில் வரலாற்றில் முதல் முறையாக சிறு அசம்பாவிதம் கூட நடைபெறவில்லை என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. பசும்பொன், மதுரை, கோரிப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நடந்த விழாக்களில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. இந்த தேவர் ஜெயந்தி விழாவை ஒட்டி 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.