சென்னை: சமூக வலைதளத்தில் தமிழக அரசு பற்றி அவதூறாக பதிவிட்டதாக நிர்மல்குமார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கலகம் செய்ய தூண்டுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல், வதந்தி பரப்புதல் ஆகிய பிரிவுகளில் நிர்மல்குமார் மீது புகார் உள்ளது. பாஜக ஐ.டி.பிரிவு தலைவர் நிர்மல்குமார் நாளை நேரில் ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளார்.