×

பனிப்பொழிவுக்கு முன்னதாக பாக். ஆக்கிரமிப்பு; காஷ்மீரில் குவியும் தீவிரவாதிகள்: உளவுத்துறை தகவலால் அலர்ட்

புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முகாம்களில் தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உளவுத்துறை நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்களில், கடந்த சில நாட்களாக தீவிரவாதிகளின் எண்ணிக்கையும், செயல்பாடுகளும் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து வெளியான எச்சரிக்கை அறிக்கையில், ‘லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள், இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அதிகம் ஊடுருவ வைக்க திட்டமிட்டுள்ளன. பனிப் பொழிவுக்கு முன்பாக 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிரவாதிகளின் முகாம்கள் அனைத்தும் எல்லைக்கு அருகே மாற்றப்பட்டுள்ளன. எல்லையை ஒட்டியுள்ள வீடுகள் தீவிரவாத முகாம்களாக பயன்படுத்தப்படுகின்றன. ஜம்மு காஷ்மீரின் எல்லையை ஒட்டியுள்ள மசில், கெரன் மற்றும் குரேஸ் ஆகிய பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்களுக்கு 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் வந்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப் பொழிவு நிலவும் நேரத்திலும், எல்லையில் விழிப்புடன் ரோந்து பணியை மேற்கொள்ள பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்படும் தீவிரவாத முகாம்களுக்கு தேவையான உதவிகளை பாகிஸ்தான் ராணுவமும், உளவுத்துறை அமைப்பான ஐஎஸ்ஐ.யும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Pak ,Kashmir , Pak before the snowfall. aggression; Terrorists Gathering in Kashmir: Intelligence Alert
× RELATED பாக்.கில் சரப்ஜித் சிங் கொலையில் தொடர்புடைய குற்றவாளி கொலை