×

முதல் திருமணத்தை மறைத்து குமரியில் 2 பள்ளி மாணவிகளை கடத்தி திருவான்மியூரில் ஒரே வீட்டில் குடித்தனம்: வாலிபர் அதிரடி கைது: பரபரப்பு தகவல்கள்

நாகர்கோவில்: குமரியில் திருமணமாகி குழந்தை இருப்பதை மறைத்து, ஒரே நேரத்தில் 2 மாணவிகளை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் காட்டாத்துறை அருகே உள்ள குட்டக்குழி காலனியை சேர்ந்தவர் வினு (22). பிளம்பர். இவர் கடந்த 1 வருடத்துக்கு முன் சிராயன்குழியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் தான் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் வினு, வேலைக்கு சென்ற இடத்தில் மார்த்தாண்டம் காப்புக்காடு பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியது. தனது மனைவிக்கு தெரியாமல் பிளஸ் 2 மாணவியுடன் பல்வேறு இடங்களுக்கு வினு சென்று ஜாலியாக இருந்து வந்தார். அடிக்கடி பார்ட்டி தருகிறேன் என கூறி ஓட்டல்களுக்கும் அழைத்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் பிளஸ் 2 மாணவியின் தோழியான, திருவட்டார் கேசவபுரம் பகுதியை சேர்ந்த மற்றொரு பிளஸ் 2 மாணவி, வினுவுக்கு அறிமுகம் ஆனார். அந்த மாணவியையும் செல்போனில் பேசியே மயக்கினார். அந்த மாணவிக்கும் பார்ட்டி தருகிறேன் என கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார். இரு மாணவிகளும் போட்டி போட்டு வினுவுடன் நெருக்கமாகினர். சிறிது காலம் ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவருடன் ஜாலியாக இருந்து வந்த வினு, பின்னர் இருவரையும் ஒன்றாக அழைத்துக்கொண்டு சுற்றி திரிய தொடங்கினார்.

இந்த நிலையில் கடந்த வாரம் இரு மாணவிகளும் மாயம் ஆனார்கள். இது குறித்து மார்த்தாண்டம், திருவட்டார் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு மாணவிகளை தேடி வந்தனர். போலீஸ் விசாரணையில், மாணவிகள் இருவரும் வினுவுடன் பழகியது தெரிய வந்தது. இதையடுத்து வினு தொடர்பாக விசாரித்த போது அவர் மாயமாகி இருந்தார். எனவே அவர் தான் இரு மாணவிகளையும் அழைத்து சென்றது உறுதியானது.

இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் சென்னை திருவான்மியூர் பகுதியில் இருப்பது தெரிய வந்து, தனிப்படை போலீசார் சென்று அவர்களை அழைத்து வந்தனர். மீட்கப்பட்ட இரு மாணவிகளையும் அனைத்து மகளிர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வினுவையும் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வினு மீது ஏற்கனவே ெகாலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. போலீஸ் ரவுடி பட்டியலிலும் அவர் பெயர் இடம் பெற்றிருந்தது.



Tags : Kumari ,Thiruvanmiyur , Kidnapped 2 schoolgirls in Kumari hiding first marriage and got drunk in same house in Thiruvanmiyur: Youth arrested: sensational news
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...